இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் இடையே சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கையின் புதிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை 2022 ஜூலை 26ஆந் திகதி அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, தற்போதைய பொருளாதார சவால்களின் பின்னணியில் இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவிகள் குறித்து உயர்ஸ்தானிகர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்கு விளக்கமளித்தார். குறிப்பாக இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இந்திய மக்களுக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் நன்றிகளைத் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் இருதரப்பு ஈடுபாடுகளின் முன்னேற்றம் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி மற்றும் உயர்ஸ்தானிகர் பாக்லே ஆகியோர் கலந்துரையாடியதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக ஒத்துழைப்பு குறித்து திருப்தி வெளியிட்டனர்.

Spread the love