இரண்டு வகையான எரிபொருட்களின் விலையை குறைத்துள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இரண்டு வகையான எரிபொருட்களின் விலையை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த விலைத்திருத்தம் நேற்று(02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதற்கமைவாக லங்கா டீசல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 405 ரூபாவாகும்.

மண்ணெண்ணை ஒரு லீற்றரின் விலை பத்து ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 355 ரூபாவாகும். ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லையென பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் அறிவித்துள்ளது.

Spread the love