இரண்டாவது மின் பிறப்பாக்கி இன்றிரவு வழமைக்கு

செயலிழந்துள்ள நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாவது மின் பிறப்பாக்கி இன்றிரவு 8 மணி முதல் மீண்டும் மின் கட்டமைப்புடன் இணைத்துக்கொள்ளப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. திருத்தப்பணிகள் நிறைவடைந்தமையை அடுத்து இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் தேசிய மின் கட்டமைப்பிற்கு கிடைக்கவேண்டிய 270 மெகாவாட் மின்சாரம் இழக்கப்பட்டதாக மின்சார சபை தெரிவித்திருந்தது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாவது மின் பிறப்பாக்கி தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த 08 ஆம் திகதி திடீரென செயலிழந்தது.

Spread the love