இயக்குநராகும் இசையமைப்பாளர் யுவன்!


தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவரது இசையில் பல பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளன – யுவன் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி ஊடகவியலாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது யுவன் கூறும் போது, நான் திரைத்துறையில் 25 ஆண்டுகள் கடந்தது பெரிய காரணம் ரசிகர்கள் தான். இசையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நான் அடுத்ததாக இயக்குநராக அவதாரம் எடுக்க இருக்கிறேன். என்னுடைய ஒய்.எஸ் ஆர் தயாரிப்பு நிறுவனம் மூலம், புதிய படத்தை இயக்க இருக்கிறேன். அந்த படத்தின் பணிகள் இந்த வருடம் அல்லது அடுத்த வருடம் தொடங்கும். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாக்க இருக்கிறேன் என்றார்.

Spread the love