இன்று (08) காலை 09.30 மணிக்கு கூடவுள்ள பாராளுமன்றம்

பாராளுமன்றம் இன்று (08) காலை 09.30 மணிக்கு கூடவுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து எதிர்க்கட்சி கொண்டு வந்த, சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் இன்று காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுக்கூட்டம் இன்று மதியம் 12.30 மணிக்கு நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பாராளுமன்றத்தின் எதிர்கால விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

Spread the love