இன்று முதல் வழமைக்கு திரும்பும் தனியார் பஸ் சேவைகள்

தனியார் பஸ்கள் இன்று (18) முதல் வழமை போல் சேவையில் ஈடுப்படும்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாளாந்தம் குறைந்தப்பட்சம் 15 சதவீதமளவில் தான் தனியார் பஸ்கள் நாடு தழுவிய ரீதியில் சேவையில் ஈடுப்படுகின்றன. எனினும், இன்றில் இருந்து வழமைபோல் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடும் என அகில இலங்கை தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

வரையறையற்ற வகையில் தனியார் பஸ்களுக்கு எரிபொருளை விநியோகிக்க தீர்மானித்துள்ளமை சிறந்த விடயம். கொவிட் தாக்கம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் பஸ் சேவை தொழிற்துறை முழுமையாக பாதிக்கப்பட்டதாகவும் . அகில இலங்கை தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் கூறினார்.

Spread the love