எல்லை மீறியவர்கள் தொடர்ந்து விளக்க மறியலில்

இலங்கையின் வடக்கு கடற்பகுதி நெடுந்தீவுக்கு அருகே, அத்துமீறி பின்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட 43 தமிழக மீனவர்களினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (13/01) ஊர்காவற்றுறை நீதிமன்றில் அவர்களை முன்னிலைப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் மீள விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதியினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு கடலில் கடந்த டிசம்பர் 19 ஆம் திகதி சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 43 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன் 6 படகுகளும் கைப்பற்றப்பட்டிருந்தன.

Spread the love