இந்திய டெஸ்ட் அணியின் புதிய கப்டனாக ரோகித்

இந்திய டெஸ்ட் அணியின் கப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியுள்ள நிலையில் புதிய கப்டனாக ரோகித் சர்மாவை BCCI நியமித்துள்ளது.


தென்னாபிரிக்காவில் கடந்த டிசெம்பர் மாதம் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்ததையடுத்து விராட் கோலி கப்டன் பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து அடுத்த மாதம் இலங்கை அணிக்கெதிராக இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள நிலையில் ரோகித் சர்மாவை புதிய டெஸ்ட் அணியின் கப்டனாக BCCI நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. ரோகித் சர்மா ஒருநாள் மற்றும் T-20 அணியின் கப்டனாக இருந்த நிலையில் தற்போது 3 வடிவிலான அணியிலும் அவர் கப்டனாக பணியாற்றுவார். 

Spread the love