இந்திய ஜனாதிபதி வேட்பாளர் யார்?- எதிர்க்கட்சி வரிசையில் உட்கட்சிக் குழப்பம்!

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிகாலமானது வருகிற ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற ஜூன் அல்லது ஜூலை மாதம் நடைபெறும் என்பது நடைமுறை.

புதிய ஜனாதிபதியைத்தேர்ந்தெடுப்பதானது நாட்டினைப்பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற எம்.பி.க்கள், மற்றும் மேல்சபை எம்.பிக்கள் அத்துடன் மாநில சட்டசபை உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுப்பார்கள் இது நடைமுறையாகும். அடுத்த ஜனாதிபதி யார்? என்கிற எதிர்பார்ப்பு இந்திய அரசியலில் ஓர் மிக அபரிதமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது தற்காலத்துக்கான விசேட செய்தியாகக்காணப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சி சார்பாக யார் நிறுத்தப்படுவார் என்பது பூடகமாகவேயுள்ளது.

இந்த நிலையில், எதிர்க்கட்சியின் சார்பாக ஐக்கிய ஜனதா தள கட்சி, தலைவரும், பீகார் முதல் மந்திரியுமான நிதிஷ்குமாரை வேட்பாளராக நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. நிதிஷ்குமார் தற்போது பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மராட்டிய மாநில தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக் கூறும்போது, ‘ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளர் யார்? என்பதில் தலைவர்கள் ஒன்று கூடி முடிவு செய்வார்கள் என்றார்.

மேலும் நிதிஷ்குமாரை வேட்பாளராக நிறுத்துவது குறித்து ஆராயப்படும். ஆனாலும் அதற்கு முன் அவர் தற்போது அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதா கூட்டணியை விட்டு வெளியேறியாகவேண்டும் ’ என்று தெரிவித்தார். இது இவ்விதமிருக்க வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற காத்திருக்கும் இந்திய பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை எதிர்த்து காங்கிரஸ் அல்லாத எதிர்கட்சிகள் புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன, அதில் குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி அவர்களும் மற்றும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவரும், தெலுங்கானா முதல் மந்திரியுமான சந்திரசேகர ராவ் ஆகியோரும் ஈடுபட்டு வருகின்றார்கள் என்பதும் இதனோடு இணைந்த செய்தி.

இதற்காக அவர்கள் முழு மூச்சாக எதிர்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். இதனால் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து நிதிஷ்குமாரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன. ஆனால் மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ் ஆகியோர்  இணைந்து காங்கிரஸ் அல்லாத எதிர்கட்சிகளை இணைத்து கூட்டணி அமைப்பதில் உறுதியாக உள்ளனர். இவ்வேளை பீகார் முன்னாள் முதல் மந்திரி  லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜ்பிரதாப் யாதவ் கருத்துத்தெரிவிக்கையில் ‘கொலை வழக்கு ஒன்றில் சிக்கிய ஒருவரை எப்படி இந்தியாவின் உயர்ந்த பதவிக்கு தேர்ந்தெடுக்க முடியும்’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து நிதிஷ்குமார் பதிலிறுக்கும்போது , ‘இது பற்றி எனக்கு மனதில் எதுவும் தோன்றவில்லை’ என தனது மனதின் கூற்றை எடுத்துக்கூறியுள்ளார். இவற்றை அவதானித்து வரும் அரசியல் அவதானிகள் மற்றும் அரசியல் வல்லுனர்கள் பேச்சாளர்கள் பலரும்  தமது கருத்தைக்கூறி நிற்கையில்.  இந்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளிடம் ஓர் புரிந்துணர்வு ,மற்றும்கூட்டுமுயற்சி அத்துடன் ஒருமித்த கருத்து போன்றவைகள்  இல்லாததால் எதிர்கட்சி வேட்பாளர் வெற்றி பெற சாதகமான தன்மைகள்  இல்லை என்று எதிர்வு கூறி வருகின்றனர்.

Spread the love