இந்திய அணியில் இருந்து லோகேஷ் ராகுல் நீக்கம்

இலங்கை அணிகள் மோதும் முதல் T-20 போட்டி எதிர்வரும் 3 ஆம் திகதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத் தொடரில் இருந்து லோகேஷ் ராகுல் நீக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி தற்போது வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இறுதியாக நடைபெற்ற போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றிப்பெற்றது.

இந்திய அணி அடுத்து இலங்கை அணியுடன் விளையாடுவுள்ளது. இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்ப யணம் மேற்கொண்டு மூன்று T-20 பொட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- இலங்கை அணிகள் மோதும் முதல் T-20 போட்டி எதிர்வரும் 3 ஆம் திகதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. 2 ஆவது ஆட்டம் புனேயில் 5 ஆம் திகதியும் 3 ஆவது மற்றும் இறுதி போட்டி ராஜ்கோட்டில் 7 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.

ஒருநாள் போட்டிகள் ஜனவரி 10, 12 மற்றும் 15 ஆம் திகதிகளில் கவுகாத்தி, கொல்கத்தா, திருவனந்தபு ரத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கான இந்திய. அணி அடுத்த வாரம் அறவிக்கப்படுகிறது. கிரிக்கெட் வாரியத்தால் நீக்கப்பட்ட அணித்தலைவர் சர்மா தலைமையிலான தேர்வு குழுதான் இலங்கை தொடருக்கான அணியை தேர்வு செய்கிறது. இந்நிலையில் இலங்கை தொடருக்கான T-20 அணியில் இருந்து லோகேஷ் ராகுல் நீக்கப்படுகிறார். இதை கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. இதேபோல் ரோகித் சர்மாவும் காயத்தில் இருந்து முழுமையாக குணம் டையவில்லை. இதனால் ஹர்திக் பாண்ட்யா அணித்லைவராக நியமிக்கப்படலாம். முன்னாள் அணித்தலைவர் வீராட் கோலிக்கும் ஓய்வு கொடுக்கப்படுகிறது.

Spread the love