இந்தியா, சீனாவிற்கிடையில் சிக்கி தவிக்கும் இலங்கை: சீன உளவு கப்பலின் நோக்கம்?

சீனாவின், ‘யுவான் வாங் 5’ என்ற உளவுக் கப்பல், அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு நேற்றுக் காலை வந்தடைந்தது. இக்கப்பல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை இங்கு நிறுத்தி வைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டபோதும், தனது பயணத்தை சுருக்கிக் கொண்டு இந்த உளவுக் கப்பல் முன்னதாகவே எதிர்வரும் 19 ம் திகதி மாலை இங்கிருந்து செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கடற்பரப்பிற்குள் நேற்று முன்தினம் பிற்பகல் இந்தக் கப்பல் பிரவேசித்திருந்தது. பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்தக் கப்பல் நேற்று காலை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்த நிலையில் நேற்று முதல் 4 நாட்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்தை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் ஏற்கனவே, கடந்த 11 ஆம் திகதியில் இருந்து 17ஆம் திகதி வரை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு வெளிவிவகார அமைச்சு அனுமதி வழங்கினாலும் இந்தியாவின் பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளை வெளிப்படுத்திய நிலையில் கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு வெளிவிவகார அமைச்சு சீனாவிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்திருந்தது.

எவ்வாறாயினும், இந்த கோரிக்கைக்கான காரணத்தை வெளிவிவகார அமைச்சு பகிரங்கப்படுத்தவில்லை. இந்தநிலையில் தனது பயணத்தை சுருக்கிக் கொண்டு இந்த உளவுக் கப்பல் முன்னதாகவே எதிர்வரும் 19 ஆம் திகதி மாலை இங்கிருந்து செல்லவுள்ளதாக அம்பாந்தோட்டை துறைமுக பொறுப்பதிகாரியான நிர்மல் சில்வா டெய்லி மிரரிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து இந்திய ஊடகங்கள் தெரிவிக்கையில், சீனாவின், ‘யுவான் வாங் 5’ உளவுக் கப்பல் இங்கு நிற்கும் போது, ஆந்திராவின் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள ‘இஸ்ரோ’வின் ரொக்கெட் ஏவுதளம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு  சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் அந்த உளவுக் கப்பல் சேகரித்துச் செல்லக் கூடிய அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீன இராணுவத்துக்கு சொந்தமான, ‘யுவான் வாங் 5’ உளவுக் கப்பலை, ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு பணிகளுக்கான கப்பலாக 2007ல், அந்நாட்டு இராணுவம் பதிவு செய்துள்ளது. கண்டம் விட்டு கண்டம் தாண்டி சென்று தாக்க கூடிய, ‘பலஸ்டிக்’ ஏவுகணைகளை ஏவவும், அதை கண்காணிக்கவும், அது தாக்க வேண்டிய இலக்கை மிக துல்லியமாக திட்டமிட்டு அழிக்கவும் இந்த கப்பல் பயன்படுத்தப்படுகிறது. இந்த கப்பல், விண்வெளி மற்றும் செயற்கைக்கோள்களை உளவு பார்க்கும். மேலும், கடலின் ஆழம் மற்றும் அந்தப் பகுதியில் நீர்மூழ்கிக் கப்பல்களோ, நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல்களோ செல்ல முடியுமா என்பதையும் ஆய்வு செய்யும் திறன் உடையது. இதுபோன்ற உளவுக் கப்பல் இந்தியா, சீனா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிடமும் உள்ளன. சீனாவிடம் acஇதுபோன்ற ஏழு கப்பல்கள் உள்ளன.

தற்போது இலங்கைக்கு வந்துள்ள இந்தக் கப்பல், 728 அடி நீளமும், 85 அடி அகலமும் உடையது. சீனாவின், ‘லாங் மார்ச் 5பி’ என்ற ரொக்கெட்டை ஏவ, இந்தக் கப்பல் சமீபத்தில் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில், அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு நேற்று காலை வந்த இந்த உளவுக் கப்பல், எதிர்வரும் 19 வரை அங்கு நிறுத்தி வைக்கப்பட உள்ளது. இந்த உளவுக் கப்பலில், ‘எலக்ரோனிக் வார்பேர்’ என்றழைக்கப்படும் நவீன போர் தொழில் நுட்பங்கள் உள்ளன. ஒரு நாட்டின் மீது போர் தொடுக்கும் போது, முதலில் அவர்களின் இணையம் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை முடக்குவது வழக்கம். அதற்கு தேவையான அனைத்து நவீன கருவிகளும் இந்த உளவு கப்பலில் உள்ளது.

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஆறுபடை தளங்கள் அம்பாந்தோட்டைக்கு அருகே அமைந்துள்ளன. அங்கு என்னென்ன தொழில்நுட்பங்கள் உள்ளன, எவ்வளவு போர் விமானங்கள், போர் கப்பல்கள், ராடார்கள் உள்ளன, அவற்றின் திறன் என்ன என்ற தகவல்களை அவர்கள் சேகரித்து செல்வது எளிது. மேலும், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோவின் ரொக்கெட் ஏவுதளம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம் அனல் மின் நிலையம் உள்ளிட்டவை குறித்து இரகசிய தகவல்களை அந்த கப்பல் உளவு பார்த்து திரட்டக்கூடிய வாய்ப்புள்ளது. ஒரு நாட்டின் மீது போர் தொடுக்கும் போது, முதலில் அவர்களின் இணையம் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை முடக்குவது வழக்கம். அதற்கு தேவையான அனைத்து நவீன கருவிகளும் இந்த உளவு கப்பலில் உள்ளது.

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஆறுபடை தளங்கள் அம்பாந்தோட்டைக்கு அருகே அமைந்துள்ளன. அங்கு என்னென்ன தொழில்நுட்பங்கள் உள்ளன, எவ்வளவு போர் விமானங்கள், போர் கப்பல்கள், ராடார்கள் உள்ளன. அவற்றின் திறன் என்ன என்ற தகவல்களை அவர்கள் சேகரித்து செல்வது எளிது.

இலங்கையில் நின்றபடி இந்தியாவின் பாதுகாப்பு இரகசியங்களை கண்காணித்து, தேவையான தகவல்களை சீனக் கப்பல் சேகரித்துச் செல்வது, இந்திய இராணுவத்துக்கு பெரிய சவாலை எதிர்காலத்தில் உருவாக்கும். எனவே, இந்த கப்பலின் வருகை இந்திய பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமையும் என, அந்நாட்டு இராணுவ அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். கடுமையான எதிர்ப்பை தெரிவித்தும், சீன உளவுக் கப்பல் வருகையை, இலங்கை தடுக்காதது, இந்திய மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Spread the love