ஆட்டநிர்ணய குற்றச்சாட்டை விசாரிக்க ஐசிசி அதிகாரி இலங்கைக்கு!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவின் பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷலை இலங்கைக்கு அழைக்க இலங்கைக்கு கிரிக்கெட் நிர்வாக குழு தீர்மானித்துள்ளது.

பாகிஸ்தானுடன் இடம்பெற்ற போட்டியொன்றில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார முன்வைத்த குற்றச்சாட்டையடுத்து அவர் அழைக்கப்பட்டுள்ளார். அதன்படி, இலங்கைக்கு வரும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவின் பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷல் இந்த விடயம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகஇலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

Spread the love