அரசாங்க அதிகாரிகளுக்கு பிரதமர் பிறப்பித்துள்ள உத்தரவு

அரசாங்க நிலத்தை விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கைக்காக வழங்குவதில் எந்தவொரு அரசாங்க அதிகாரியும் தலையிட வேண்டாம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பல்வேறு சுற்றறிக்கைகளின்படி அரசாங்க நிலங்களை விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கைக்காக வழங்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் வலியுறுத்தினார். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உணவு உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைய வேண்டும் என ஹோமாகம கந்தனவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதமர் குறிப்பிட்டார்.

Spread the love