மீண்டும் அத்துமீறிய இந்திய மீனவர் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி எல்லைதாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 6 பேர் இன்று அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகர் கோவளம் கடற்பரப்பில் தமிழ்நாடு நாக பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் நாட்டுப்படகில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினரால் ஒரு படகும் அதில் இருந்த ஆறு மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கடற்படையினரால் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு மீனவர்களுக்கு மலேரியா, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் மீன்பிடி நீரியள் வள திணைக்கள அதிகாரிகளிடம் சட்ட நடவடிக்கைக்காக கையளிக்கப்படவுள்ளனர் என்பது, பிந்திய செய்தி.

Spread the love