எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு இலங்கைக்கு தேவையான அவசியமான மருந்து பொருட்கள் தொடர்பான முழுமையான அறிக்கையை இன்றைய தினம் (12/01) வழங்குமாறு, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு. சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டுக்கு அவசியமான ஒளடதங்கள் தொடர்பில்,சுகாதார அமைச்சில் நேற்று (11/01) இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
அதற்கமைய, மூன்று மாத அடிப்படையில், இரண்டு காலப்பகுதிக்கு அவசியமான ஔடதங்கள் குறித்து கணக்கிட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.